காசாவில் இஸ்ரேல் கொடூர தாக்குதல்; 75 பேர் பலி

3 hours ago 2

காசா சிட்டி,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது.

இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது. ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில், இதுவரை 54,772 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1.25 லட்சம் பேர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர். இந்த முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1-ந்தேதியுடன் முடிவடைந்தது.

முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த சூழலில், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு ஹமாஸ் அமைப்பு விருப்பம் தெரிவித்து இருந்தது. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில், காசா முனை பகுதியில் இஸ்ரேல் முழு அளவில் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், நிவாரண உதவி பெறுவதற்காக காத்திருந்த 8 பாலஸ்தீனியர்கள் உள்பட 70-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர்.

இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதலில் ஒரே நாளில் 75 பேர் பலியாகி உள்ளனர். இது இனப்படுகொலை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காசா நிவாரண உதவிக்கான அறக்கட்டளை, அதன் பணியை தொடங்கியதில் இருந்து, அதனை பெறுவதற்காக காத்திருந்தவர்கள் மீது நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்து உள்ளது.

Read Entire Article