காசாவின் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 6 பேர் பலி

2 months ago 10

பெய்ரூட்: பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் படையினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக ஹமாஸ் படையினர் கடத்தி சென்றனர். இதையடுத்து ஹமாஸ் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் வடக்கு காசாவின் டெய்ர் அல்-பாலா பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் இரவு வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரே வீட்டைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலியானார்கள்.

The post காசாவின் குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 6 பேர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article