கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

2 weeks ago 8

கள்ளக்குறிச்சி: மையனூரில் விவசாய கிணற்றில் விழுந்த சிறுவனின் சடலம் 7 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டது. பாஸ்கேல் என்பவருக்கு சொந்தமான விளை நிலத்தில் மின் மோட்டாரை சரி செய்யும் பணி நடந்தது. பணியின்போது டிராக்டர் இயக்க நிலையில் இருந்தது; அதில் பாஸ்கேலின் தம்பி மகன்கள் விளையாடியுள்ளனர். விளையாடிக் கொண்டிருந்த ஜான்பன் ராஜ், ஜெரீஸ், டேனிஷ் டிராக்டருடன் கிணற்றில் விழுந்தனர். நீச்சல் அடித்து ஜான்பன் ராஜ், ஜெரீஸ் தப்பி வந்த நிலையில், சிறுவன் டேனிஷ் நீரில் முழ்கினார். 7 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுவன் டேனிஷ் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

The post கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article