புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதமில்லா சட்டப் பேரவையாக அறிவித்து துவக்கவிழாவுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சரை அழைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதம் இல்லா சட்டப் பேரவையாக மாற்றும் விதமாக நேவா (NeVA) திட்டத்தின் கீழ் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் நிதி அளிப்புடன் பணிகள் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரில் இத்திட்டத்தின் சில பகுதிகள் மட்டுமே சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டன. எம்.எல்.ஏக்கள் இருக்கையில் கைக்கணினி பொருத்தப்பட்டு அலுவல் பட்டியல் கேள்வி பதில், ஆளுநர் உரை, மற்றும் முதலமைச்சரின் வரவு செலவு திட்ட உரை ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.