சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 7,314 கவுரவ விரிவுரையாளர்கள் மதிப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாதம் ரூ.25,000 மட்டுமே வழங்கப்படுகிறது.
பல்கலைக்கழக மானியக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பல மாநிலங்களில் வழங்கப்படுகின்றன. எனவே, அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, யுஜிசி நிர்ணயித்த ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
The post கவுரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி நிர்ணயித்த ஊதியம்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.