கள்ளக்குறிச்சியில் 69 பேர் உயிரிழந்த விஷச்சாராய வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

3 months ago 12

சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் 19-ம் தேதி விஷச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ வால்பாறை ஸ்ரீதரன், பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் கே.பாலு, பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ், தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

Read Entire Article