விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் நேற்று தொடங்கினர்.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தியதில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 69 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த சிபிஐ-க்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.