கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி தகவல்

2 months ago 11

புதுக்கோட்டை: சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றி இருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று (நவ.20) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்றது. வேறு எந்த அரசும் எடுக்காத அளவுக்கு தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து இருக்கிறது. நீதிமன்றத்தில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து விரிவான வாதத்தை இந்த விசாரணையில் வழக்கறிஞர்கள் எடுத்து வைத்தனர். எனினும், இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article