காரிமங்கலம், பிப்.15: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கள் விற்பனை செய்வதாக வந்த புகாரின்பேரில், காரிமங்கலம் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, கோடியூர் மற்றும் சென்றாய அள்ளி பகுதியில் கள் இறக்கி விற்றதாக சத்யசுந்தரம்(40), மாதன்(42) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post கள் விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.