சென்னை: கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துகள் தமிழகம் முழுவதும் எங்கெங்கு உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்து, அவற்றை அளவீடு செய்ய 33 மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலைமகள் சபா என்ற நிதி நிறுவனம் தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் முதலீடுகளைப் பெற்று பல ஆயிரக்கணக்கான நிலங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டது. முதலீடு செய்தவர்களின் பெயர்களிலேயே நிலங்கள் வாங்கப்பட்டன. இந்நிலையில், இந்நிறுவனத்துக்கு எதிராக மோசடி புகார்கள் வரத் தொடங்கியதும் நிறுவனத்தை நடத்திய நிர்வாகிகள் மீது வழக்குகள் பதியப்பட்டன. இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம் கலைமகள் சபாவுக்கு சொந்தமான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமித்து உத்தரவிட்டது.