கும்பகோணம் தனி மாவட்ட அறிவிப்பு கேள்விக்குறியாகி உள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தனி மாவட்டம் அறிவிக்கப்படவில்லை என கும்பகோணம் பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.