கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் களேபரத்தை உண்டாக்கிய திமுகவினர்!

1 week ago 1

‘குடிசைகள் இல்லா தமிழகம்’ என்ற இலக்கை அடையும் பொருட்டு தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித்தருவதற்காக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இந்தத் திட்டத்தில், குடிசை வீடுகளிலும் ஓட்டு வீடுகளிலும் வசிக்கும் எளிய மக்களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மானியத்தில் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. இதற்காக 2024-25-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஏழைகள், வீடற்​றவர்​கள், குடிசை மற்​றும் ஓட்டு வீடு​களில் வசிப்​பவர்​களுக்கு மட்​டுமே கலைஞரின் கனவு இல்​லம் திட்​டத்​தில் முன்னுரிமை அளிக்​கப்பட வேண்​டும் என அரசு விதி​களை வகுத்​துள்​ளது. இந்​தத் திட்​டத்​திற்​கான பயனாளி​களை சம்​பந்​தப்​பட்ட ஊராட்சி மன்​றத் தலை​வர், ஊராட்சி உதவி பொறி​யாளர்​கள், வட்​டார பொறி​யாளர், வட்​டார வளர்ச்சி அலு​வலர், வார்டு உறுப்பினர்​கள், ஊராட்சி மேற்​பார்​வை​யாளர் ஆகி​யோர் அடங்​கிய குழு தேர்வு செய்​யும்.

Read Entire Article