சென்னை: கலை பண்பாட்டுத்துறை, நுண்கலைப் பிரிவில் உள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான ஓவிய சிற்பக் கலைக்காட்சி (மரபுவழி / நவீனபாணி பிரிவில்) தொடர்ந்து நடத்தி, சிறந்த கலைஞர்களுக்கு பரிசுத்தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி வருகிறது.
அந்த வகையில், 2024-25-ம் நிதியாண்டில் மாநில அளவிலான ஓவிய-சிற்பக் கலைக்காட்சி நடத்தி, ஓவியக்கலை பிரிவில் சிறந்த கலைப்படைப்புகள் வழங்கும் 36 வயதுக்கு மேற்பட்ட 15 மூத்த கலைஞர்களுக்கு தலா ரூ.20,000 வீதமும், 35 வயதுக்குட்பட்ட 10 இளம் கலைஞர்களுக்கு தலா ரூ.10,000 வீதமும் வழங்கப்படும். இதே எண்ணிக்கை அடிப்படையில் சிற்பக்கலை பிரிவிலும் சிறந்த 25 கலைஞர்கள் என 50 பேருக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.