கலப்பு திருமணம்... காரை கொண்டு மோதி, கத்தியால் குத்தி பெண் கான்ஸ்டபிள் படுகொலை; சகோதரர் வெறிச்செயல்

6 months ago 22

ரங்காரெட்டி,

தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் இப்ராகிம்பட்டினம் நகரில் ராயபோலு கிராமத்தில் வசித்து வந்தவர் நாகமணி (வயது 27). பெண் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்துள்ளார். இவர் வேலைக்கு சென்றபோது, அவருடைய சகோதரர் பரமேஷ் என்பவரால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். காரை கொண்டு ஸ்கூட்டர் மீது மோதியதில் நாகமணி தரையில் விழுந்துள்ளார். இதன்பின்பு, அவரை பலமுறை கத்தியால் குத்தி விட்டு அந்த இடத்தில் இருந்து பரமேஷ் தப்பி விட்டார்.

இந்த சம்பவத்திற்கு பின்னணியில், 10 ஆண்டுகளுக்கு முன்பு, நாகமணிக்கு திருமணம் நடந்து பின்னர் கணவரை பிரிந்து விட்டார். 2022-ம் ஆண்டு விவகாரத்தும் செய்து விட்டார். இந்நிலையில், கடந்த நவம்பர் 19-ந்தேதி யாதகிரிகட்டா பகுதியில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி 2-வது திருமணம் செய்து கொண்டார். இருவரும் வேறு சமூகத்தினர் ஆவர். இதனால், ஸ்ரீகாந்த் மற்றும் நாகமணியின் கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

இந்த சூழலில், சம்பவத்தன்று ஸ்கூட்டரில் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக நாகமணி புறப்பட்டார். செல்லும் வழியில் ஸ்ரீகாந்துக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நாகமணி, காரை கொண்டு மோதி பரமேஷ் கொலை செய்ய முயற்சிக்கிறார் என பயத்துடன் கூறியுள்ளார்.

இதன்பின்னர், அழைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பதற்றமடைந்த ஸ்ரீகாந்த், அவருடைய சகோதரரிடம் நாகமணிக்கு என்ன நடந்தது? என பார்த்து வரும்படி கூறியுள்ளார். இதன்படி நாகமணியை தேடி சென்ற இடத்தில், அவர் சாலையில் படுகாயங்களுடன் கிடந்துள்ளார். இதன்பின்பு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், அதில் பலனின்றி நாகமணி உயிரிழந்து விட்டார்.

முதலில் இந்த வழக்கில் மர்ம நபர் என்ற அடிப்படையில் போலீசார் விசாரித்து வந்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் பரமேசுக்கு உள்ள தொடர்பு பற்றி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இதன்பின்னரே பரமேஷை தேடி போலீசார் விரைந்தனர். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கலப்பு திருமணம் செய்து கொண்ட சகோதரியை உடன்பிறந்த சகோதரரே கொலை செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article