கறிக்கடைகளை இடமாற்ற வேண்டும்

2 months ago 11

 

சூளகிரி, நவ.18: சூளகிரி ஊராட்சியில் அமைந்த ஓசூர் இருந்து பேரிகை செல்லும் குறுகலான சாலையில், 10க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நகர் பகுதி, கிராம பகுதியில் இருந்து அதிகமானனோர் வந்து இறைச்சி வாங்கி செல்கின்றனர். இந்த கறிகடைகளில் இருந்து சேகரமாகும் இறைச்சியை தின்பதற்கு, கடை முன் கூட்டமாக பல மணி நேரம் நாய்கள் காத்திருக்கின்றன.
நாய்கள் சாலையில் அங்கும் இங்கும் ஓடுவதாலும், சண்டை போட்டு சாலைக்கு செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவேஇ இப்பகுதியில் உள்ள கறிக்கடைகளை, தினசரி சந்தை வீதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என ொபதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கறிக்கடைகளை இடமாற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article