கறம்பக்குடி காவல்நிலையத்தில் சீமான் மீது வழக்குபதிவு

2 weeks ago 7

கறம்பக்குடி: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திராவிட கழகத்தினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி போலீசில் தி.க. மாநில அமைப்பாளர் முத்து புகார் நேற்று புகார் கொடுத்தார். அதில், ‘’பெரியார் குறித்து சீமான் தவறான தகவல்களை பரப்பி உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றும் கூறியுள்ளார். இதையடுத்து சீமான் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

The post கறம்பக்குடி காவல்நிலையத்தில் சீமான் மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.

Read Entire Article