கறம்பக்குடி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதலில் ஒருவர் பலி

4 months ago 16

 

கறம்பக்குடி, ஜன. 8: கறம்பக்குடி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதலில் ஒருவர் பலியானார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மழையூர் அருகே வாராப்பூர் கம்மங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). இவர் நேற்று தனது சொந்த வேலை காரணமாக மழையூர் தீத்தாணிப்பட்டிக்கு வந்து விட்டு ஊருக்கு சென்றுள்ளார். அப்போது எம்தெற்கு தெரு பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, பின்னால் இருந்த மற்றொரு இரு சக்கர வாகனம் ராஜேந்திரன் வந்த வாகனம் பின்னால் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு வாகனத்தில் வந்த ஒருவர் காயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மழையூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

The post கறம்பக்குடி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதலில் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article