கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ‘ஃபேஸ் கேப்ச்சர்’ முறையை மத்திய அரசு கைவிட வலியுறுத்தல்

3 hours ago 1

மதுரை: கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ‘ஃபேஸ் கேப்ச்சர்’ முறையை மத்திய அரசு கைவிட வேண்டும் என அகில இந்திய அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் அகில இந்தியச் செயலாளர் ஏ.ஆர்.சிந்து வலியுறுத்தினார்.

மதுரை மேலப்பொன்னகரம் சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் இன்று (பிப்.24) தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் அகில இந்திய அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் அகில இந்தியச் செயலாளர் ஏ.ஆர்.சிந்து, மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது: “பிப்.22, 23-ல் நடந்த மாநில நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read Entire Article