கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை சிறுமியை திருமணம் செய்து

2 days ago 5

வந்தவாசி, ஜூன் 6: வந்தவாசி அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர். வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தணிகைமலை மகன் அஜித்(27). இவர் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டாராம். தற்போது சிறுமி 3 மாதம் கர்ப்பிணியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமிக்கு நடந்துள்ள திருமணம் குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் செய்துள்ளனர். தொடர்ந்து சமூக நலத்துறை அலுவலர் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளதும் தற்போது கர்ப்பமாக உள்ளதும் உறுதியானது. எனவே, அவர் வந்தவாசி மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்த வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்.

The post கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை சிறுமியை திருமணம் செய்து appeared first on Dinakaran.

Read Entire Article