கர்நாடக, கேரள மாநில அரசுகளை கண்டித்து தீர்மானம் கொண்டுவர முடியுமா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

6 days ago 5

சென்னை: மேகேதாட்டு அணை, காவிரி நதிநீர், முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா, கேரளா அரசை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தனி தீர்மானம் கொண்டுவர முடியுமா என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: பொதுவாக, ஒரு ஆட்சிக்கான அடையாளமாக, அந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களே திகழும். ஆனால், திமுக ஆட்சியோ, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பறிபோன பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம், எங்கும் எதிலும் ஊழல் என குறைகள் மட்டுமே நிறைவாக இருக்கும் ஒரு அவல ஆட்சியாக இருக்கிறது.

Read Entire Article