மதுரை: கரூர் வைஸ்யா வங்கியின் தலைமை மேலாளர் ஸ்ரீநாத் குமாருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து தலைமை நீதிபதி உத்தரவு அளித்துள்ளது. வங்கிக் கடனை திருமப் செலுத்திய பிறகும் அடமானமாக வைத்த பத்திரத்தை திரும்பத் தர மறுப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மனுதாரரின் வீட்டுக்கேச் சென்று அடமானமாகப் பெற்ற அனைத்து ஆவணங்களையும் தலைமை மேலாளர் வரும் 17ம் தேதி அன்று வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. முழு தொகையும் செலுத்திய பிறகும் கூடுதலாக ரூ.5 லட்சம் செலுத்தினால்தான் அடமான பத்திரத்தை திரும்ப தருவோம் என வங்கி கூறியதாக தென்காசியைச் சேர்ந்த மாரித்துரை என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளருக்கு ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. உரிய கடனை செலுத்திய பின்பும் ஆவணங்களை வழங்க மறுத்தது கண்டிக்கத்தக்கது. நீதிபதிகள் ஏழை மக்களை துன்புறுத்தக் கூடாது என வங்கிகளுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளனர்.
The post கரூர் வைசியா வங்கியின் தலைமை மேலாளருக்கு ரூ.25,000 அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.