கரூர்: நீதிமன்ற உத்தரவை அடுத்து கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கியது.
கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையில் கரூரின் தற்போதைய பேருந்து நிலையமான முத்துகுமாரசாமி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. பெருகிவரும் வாகனங்கள், அதிகரிக்கும் பயணிகள் காரணமாக கடந்த 2002-ம் ஆண்டு முதல் கரூர் பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதற்காக தொடக்க காலத்தில் சேலம் புறவழிச்சாலை உள்ளிட்ட இடங்கள் பரிந்துரைக்கப்பட்டன.