கரூர் பசுபதிபாளையம் அருகே குடோனில் திடீர் தீ விபத்து

3 months ago 10

கரூர், பிப். 12: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் அருகே பழைய பொருட்களை சேகரித்து வைத்துள்ள குடோனில் திடிரென தீ ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் செல்வ நகரில் பழைய பொருட்களை சேமித்து வைக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனை சுற்றிலும் காலியிடங்களும் உள்ளன.இந்நிலையில், நேற்று மதியம், காலியிடத்தில் உள்ள காய்ந்த புற்கள் மீது திடிரென தீ பரவியது. அந்த தீ மளமளவென பரவி அருகில் இருந்த பழைய பொருட்களை சேமித்து வைக்கும் குடோனுக்குள்ளும் பரவியது.

இந்த நிகழ்வு குறித்து இந்த பகுதியில் கரூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் பசுபதிபாளையம் காவல் நிலைத்துக்கும் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்து பசுபதிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நேற்று மதியம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கரூர் பசுபதிபாளையம் அருகே குடோனில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article