கரூர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

3 months ago 13

 

கரூர், நவ.22: ஓசூரில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து கரூரில் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு செயலாளர் நகுல்சாமி தலைமை வகித்தார். அனைத்து வழக்கறிஞர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post கரூர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article