கரூர் அருகே பரபரப்பு கழிவு குப்பைகள் தீப்பிடித்து மின் கம்பத்தில் பரவியது

4 months ago 10

 

கரூர், ஜன.6: கரூர் அருகே கழிவு குப்பைகள் தீப்பிடித்து மின் கம்பத்தில் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர்- மதுரை ரோடு பைபாஸ் சாலை அணுகு சாலையில் பகுதியில் சேரும் ஓட்டல் கழிவுகள் மருத்துவ கழிவுகள் பஸ் பாடி கழிவுகள் மற்றும் பொதுமக்கள் கொண்டு போடும் குப்பைகள் சேர்ந்து எப்போதும் துர்நாற்றத்தோடு காணப்படும்.இந்த நிலையில் நேற்று மாலை எதிர்பாராத விதமாக குப்பை தீப்பிடித்து எரிந்தது. அப்போது குப்பையில் எரிந்த தீ அருகில் உள்ள மின்கம்பத்தில் உள்ள எர்த் கம்பியில் கொடி படர்ந்திருந்ததால் அதன் வழியாக பற்றி எரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் கரூர் தீயணைப்பு நிலை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீணை அணைத்தனர். இதனால் பெரும் சேதாரம் தவிர்க்கப்பட்டது.

 

The post கரூர் அருகே பரபரப்பு கழிவு குப்பைகள் தீப்பிடித்து மின் கம்பத்தில் பரவியது appeared first on Dinakaran.

Read Entire Article