கரூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்: எர்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயில் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்ப்பு

5 hours ago 3

கரூர்: கரூர் திருச்சி ரயில் வழித்தடத்தில் கரூர் மாவட்டம் திருகாம்புலியூர் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் எர்ணாகுளம் காரைக்கால் விரைவு ரயில் சிவப்புக் கொடி காட்டி 100 மீட்டர் தூரத்திற்கு முன்னதாக நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. தண்டவாளம் சீரமைக்கப்பட்ட பிறகு 1 மணி நேரம் தாமதமாக ரயில்கள் புறப்பட்டு சென்றன.

கரூர் திருச்சி ரயில் வழித்தடத்தில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள திருக்காம்புலியூர் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் இன்று (பிப். 11ம் தேதி) விரிசல் ஏற்பட்டிருந்தது. அப்பகுதியில் வசிக்கும் ஓய்வுப்பெற்ற ரயில்வே ஊழியர் கலியமூர்த்தி காலைக் கடன் கழிப்பதற்காக அவ்வழியே சென்றப்போது தண்டவாளத்தில் உள்ள விரிசலை பார்த்து இதுகுறித்து தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Read Entire Article