கரூர்: கரூர் அருகே 10 வகுப்பு மாணவியை 12ம் வகுப்பு மாணவன் அழைத்துச் சென்று நண்பர்களுடன் கூட்டு பாலியல் செய்து பின்னர் கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் தரங்கப்பட்டி அருகே 10 வகுப்பு மாணவியை 12ம் வகுப்பு மாணவன் அழைத்துச் சென்று நண்பர்களுடன் கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அப்போது மாணவி கூச்சலிட்டதால் பயந்த மாணவன், மாணவியை கத்தியால் கொடூரமாக மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதில் மாணவி படுகாயம் அடைந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மீட்டு மாணவியை மீட்டு திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தித்தனர். 10 வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 12ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவியின் கழுத்தை அறுத்த 12ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர். மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post கரூரில் மாணவியை நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்து மனைவியில் கழுத்தை அறுத்த மாணவன் கைது! appeared first on Dinakaran.