
கரூர்,
கரூரில் போலியாக பான் கார்டு, ஆதார் கார்டு தயாரித்த இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் படை காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் நடந்த விசாரணையில் போலியாக பான், ஆதார் அட்டைகளை உருவாக்கும் குழுவைச் சேர்ந்த 6 பேர் சமீபத்தில் இங்கு கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் பணிபுரிந்த இடத்தில் சிறப்புப்படை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.