கமுதி அருகே கிராமத்தில் சிசிடிவி கேமரா அமைப்பு

2 months ago 10

 

கமுதி, டிச.10: கமுதி அருகே பாப்பனம் கிராமத்தில், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா கார்த்திகைசாமி தனது சொந்த செலவில், முக்கியமான நான்கு இடங்களில் சிசிடிவி கேமரா மற்றும் உபகரணங்கள் அமைத்து கொடுத்துள்ளார். இதன் துவக்க விழாவிற்கு மாவட்ட எஸ்பி சந்தீஷ் தலைமை தாங்கி சிசிடிவி இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் எஸ்பி கூறும்போது, ‘‘கமுதி பகுதியில் இந்த ஊராட்சியில் தான் இதுபோன்று சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் குற்றச்செயல்கள் ஏதும் நடந்தால் அதனை கண்காணிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை முன்மாதிரி கிராமமாக எடுத்துக் கொண்டு, மற்ற கிராமங்களிலும் இதுபோன்று சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் ஊராட்சி மன்ற தலைவரை வெகுவாக பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் கமுதி டிஎஸ்பி இளஞ்செழியன், அபிராமம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்.இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

The post கமுதி அருகே கிராமத்தில் சிசிடிவி கேமரா அமைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article