
80 சதவீதம் பேருக்கு...
தக்கலை குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயர் கல்வி மையத்தை பொறுத்தவரை எனது பணி நிர்வாகம் தொடர்பான பணியாக இருந்தாலும், உயர் கல்வி மையதின் கல்வி மேம்பாடு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். எமது உயர் கல்வி மையத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), ரோபோட்டிக் என்ஜினீயரிங் தொழில்நுட்பம் கல்வி உள்பட 22 துறைகள் உள்ளன. அனைத்து துறைகளிலும், நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக படிப்பை நிறைவு செய்யும் 80 சதவீதம் பேருக்கு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. மீதமுள்ள 20 சதவீத மாணவர்கள் உயர் கல்விக்கு செல்கிறார்கள்.
ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங்கை பொறுத்தவரை, ஏரோநாட்டிகல், ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிக்கல் பராமரிப்பு உள்பட பாடப்பிரிவுகளில் படிப்புடன் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதால் தகுதி வாய்ந்த விமானிகளும், விமான தொழில்நுட்ப வல்லுனர்களும் உருவாக்கப்பட்டு வருகிறார்கள். வருங்காலத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய அடிப்படை ஏரோநாட்டிக்கல் படிப்புடன் பயிற்சியும் அனைவருக்கும் கண்டிப்பாக கிடைக்கும் சூழ்நிலை ஏற்படும். உயர் கல்வி மையம் மூலம் ஏரோநாட்டிக்கல் கிளப் பள்ளிகளை உருவாக்கி வருகிறோம்.
வழிகாட்டுதல் பயிற்சி
அதாவது 10 கி.மீ. சுற்றளவில் கிராமப்புறங்களில் குறிப்பிட்ட 10 பள்ளிகளை தேர்வு செய்து, அதில் ஆர்வமிக்க 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்கல் தொடர்பான ஆரம்ப கல்வியை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். இதற்கான அனைத்து வசதி வாய்ப்புகளை உயர் கல்வி மையம் செய்து வருகிறது. இங்கு செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய பாதுகாப்பு பணி அகாடமி மூலம் இந்திய ராணுவ பணிக்கு தகுதியான அதிகாரிகளை உருவாக்கி வருகிறோம். கல்லூரி நேரங்களை தவிர மற்ற காலை, மாலை வேளைகளில் இதற்கான தனி பயிற்சி திறமையான ராணுவ அதிகாரிகள் மூலம் அளிக்கப்படுகிறது.
இதனால் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். அதேபோல், தனியார் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பயோ மெடிக்கல் துறை தற்போது விரைவாக வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் பயோ மெடிக்கல் பயன்பாடு அதிகமாக இருக்கும்
இவ்வாறு அவர் கூறினார்.