கன்னியாகுமரி தோவாளை மாணிக்க மாலை, கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு

2 weeks ago 3

தஞ்சாவூர்: கும்பகோணம் வெற்றிலை, குமரி தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாக, அறிவுசார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி தெரிவித்தார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு, மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்துடன், போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதை தடுக்க முடியும். அதன்படி, தமிழகத்தில், தஞ்சாவூர் கலைத்தட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிப் பட்டு, மதுரை மல்லிகை, திண்டுக்கல் பூட்டு, கோவில்பட்டி கடலை மிட்டாய் என பல்வேறு பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. அந்த வகையில், தற்போது கும்பகோணம் வெற்றிலை, குமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

Read Entire Article