கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்துக்கு கட்டணமா? - இலவசமாக அனுமதிக்க சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தல்

4 months ago 12

கன்னியாகுமரியில் கடல் நடுவே திறக்கப்பட்டுள்ள கண்ணாடி இழைப் பாலம் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு நடந்து செல்ல இலவசமாக அனுமதிக்கப்பட்டால், சுற்றுலா மேம்படும் என்று சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குமரியில் கடல் நடுவேயுள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ளது. அருகே மற்றொரு பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இவையிரண்டும் உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்திழுக்கின்றன. கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகளின் முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் மேற்கொள்ளும் படகுப் பயணம் திகழ்கிறது.

Read Entire Article