கன்னியாகுமரி அருகே 4 வழிச்சாலை பணிக்கான கருங்கற்கள் திருட்டு

6 months ago 19

கன்னியாகுமரி,டிச.8: கன்னியாகுமரியில் நேற்று காலை சப்.இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் தலைமையிலான போலீசார் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக முகிலன் குடியிருப்பைச் சேர்ந்த சீனிவாசன் ( 32) என்பவர் ஓட்டி வந்த டெம்போவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் கருங்கற்கள் இருந்தன. விசாரணையில் அவை நாடாங்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை பணிக்காக வைக்கப்பட்டிருந்த கருங்கற்களை திருடிக்கொண்டு வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து டெம்போ உடன் கருங்கற்களை பறிமுதல் செய்த போலீசார் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post கன்னியாகுமரி அருகே 4 வழிச்சாலை பணிக்கான கருங்கற்கள் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article