கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பூங்கா

7 months ago 24

நாகர்கோவில், நவ.20: கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சிறிய பூங்கா அமைக்கப்பட உள்ளது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு கன்னியாகுமரியில் 2 நாட்கள் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ெகாண்டாடப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து, கன்னியாகுமரியில் அனைத்து அரசு துறைகளும் பல்ேவறு நடவடிக்கைகள் ேமற்கொண்டு வருகின்றன. கலெக்டர் அழகு மீனா மேற்பார்வையில் ஒவ்ெவாரு துறையும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி, உத்தரவிட்டு வருகிறார். பேரூராட்சி, உணவு பாதுகாப்புத்துறை, மாசுக்கட்டுபாடு துறை இணைந்து நெகிழி இல்லாத கன்னியாகுமரி என்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கன்னியாகுமரி பஸ் நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு அமைப்புகள் உதவியுடன், பணிமனையின் உட்புறம் மரக்கன்றுகள், பூஞ்செடிகள் நடுவது, செயற்கை நீருற்றுகள் மற்றும் செல்பி பாய்ன்ட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post கன்னியாகுமரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பூங்கா appeared first on Dinakaran.

Read Entire Article