நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்தது. இன்று காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுக்க 421 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான ஊத்து பகுதியில் 540 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது/