சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி புழல் ஏரியிலிருந்து காலை 9 மணி முதல் விநாடிக்கு 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீரும், பூண்டி ஏரியிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி உபரி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே புழல் ஏரியின் மீகைநீர் கால்வாயின் வெள்ள தணிப்புக்காக ஏரியிலிருந்து இன்று 13.12.2024 காலை 09.00 மணியளவில் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.