கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...?

6 months ago 21

சென்னை,

பெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. வேலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெஞ்சல் புயல், கனமழை எதிரொலியாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, கடலூரிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஏற்கனவே, கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

Read Entire Article