கோவை: கோவை மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது.