சென்னை: கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முற்போக்கு கொள்கையோடு பெரும் மாற்றங்களை முன்னெடுத்தவர் போப் பிரான்சிஸ் என்றும், மனிதநேயத்துடன் திருச்சபையை வழிநடத்தியவர் போப் பிரான்சிஸ் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். பின்னர் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டதை அடுத்து உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
The post கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்..!! appeared first on Dinakaran.