புதுச்சேரி, ஜன. 6: பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏம்பலம் ஏரிக்கரை சாலை அருகே நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மர்ம நபரை பிடித்து விசாரித்தனர். அதில் செம்பியம்பாளையம் பகுதியை சேர்ந்த தாஸ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து அவரை கைது செய்தனர்.
The post கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது appeared first on Dinakaran.