கண்ணூர் துணை கலெக்டர் தற்கொலை மாஜி மாவட்ட பஞ். தலைவி போலீசில் சரண்

3 months ago 14

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட துணை கலெக்டராக இருந்தவர் நவீன் பாபு (56). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது சொந்த ஊரான பத்தனம்திட்டாவுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதையொட்டி நடந்த வழியனுப்பு நிகழ்ச்சியல் பேசிய கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவி திவ்யா, துணை கலெக்டர் நவீன் பாபு ஒரு ஊழல்வாதி என்று பேசினார். இந்நிலையில் மறுநாள் காலையில் துணை கலெக்டர் நவீன் பாபு அவரது வீட்டில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.

இவரது தற்கொலைக்கு முன்னாள் பஞ்சாயத்து தலைவி திவ்யா தான் காரணம் என்று புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது கண்ணூர் டவுண் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்று மதியம் திவ்யா கண்ணூர் போலீசில் சரணடைந்தார். அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தி கண்ணூர் மகளிர் சிறையில் அடைத்தனர்.

The post கண்ணூர் துணை கலெக்டர் தற்கொலை மாஜி மாவட்ட பஞ். தலைவி போலீசில் சரண் appeared first on Dinakaran.

Read Entire Article