கடுமையான தண்டனையுடன் புதிய கந்து வட்டி தடை சட்டத்தை இயற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

3 months ago 26

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை மாநகர எல்லைக்குட்பட்ட சி.என்.கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற மூட்டை தூக்கும் தொழிலாளி, அவரது தாயார் சாவித்திரியின் மருத்துவ செலவுகளுக்காக காளிராஜ் என்பவரிடம் சில மாதங்களுக்கு முன் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடந்த மாதம் வட்டியை கட்டாததால், கண்ணனை கடுமையாக தாக்கி, அவரது தாயார் சாவித்திரியை கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ளனர்.

கந்துவட்டிக் கொடுமையால் நிகழும் தற்கொலைகள் அதிகரித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு அதீத வட்டிவசூல் தடைச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும், கந்து வட்டியை ஒழிக்க முடியவில்லை. எனவே, கடுமையான தண்டனைகளுடன் புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்ற வேண்டும். நெல்லையில் மூதாட்டி சாவித்திரியை அடித்துக் கொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

The post கடுமையான தண்டனையுடன் புதிய கந்து வட்டி தடை சட்டத்தை இயற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article