சென்னை: மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கடுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடந்த கூட்டத்தில், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள், புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் நியமனம் குறித்து நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.