கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

2 months ago 12

 

கடலூர், நவ. 11: கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனால் தினந்தோறும் கடலூர் துறைமுகம் மீன்பிடி தளத்தில் மீன் விற்பனை பரபரப்பாக நடக்கும்.

அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை முதல் மீன் விற்பனை பரபரப்பாக தொடங்கியது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிக அளவில் மீன்களை வாங்க குவிந்தனர். இதனால் மீன்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. வஞ்சிரம் ஒரு கிலோ 700 முதல் 900 ரூபாய் வரையும், சங்கரா மீன் 300 முதல் 400 ரூபாய் வரையும், இறால் வகைகள் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையும், நண்டு 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையும், பன்னி சாத்தான் மீன் 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் மீன்கள் விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கி சென்றனர்.

The post கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Read Entire Article