கடலூரில் கனமழை பாதிப்பு: தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் அடுக்கப்படும் மணல் மூட்டைகள்

5 months ago 15

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம் பரம், புவனகிரி, விருத்தாசலம், பண் ருட்டி, வடலூர், குறிஞ்சிப்பாடி, வேப்பூர், காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று காலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது.

சற்றேவிட்ட மழை, மதியம் முதல் மீண்டும் தொடர்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. விவசாயப் பணிகளும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வயல் வெளிகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ளது. கனமழை அறிவிப்பை தொடர்ந்து, கடலூர் மாவட்த்தில் தென் பெண்ணையாறு கரையோரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்ட தென் பெண்ணையாற்றுச் சாலை, ஓம்சக்தி நகர், கண்டக்காடு, குண்டு உப்பலவாடி, தாழங்குடா ஆற்று முகத்துவாரம், தேவணாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

Read Entire Article