கடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: அரக்கோணம் ராஜாளி விமான தளத்தில் பரபரப்பு

3 months ago 8

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு கர்நாடக மாநிலம், பெல்காம் பகுதியை சேர்ந்த சுபாஷ் மகன் பிரவீன்(24) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக (ஹேர் மேன்) வீரராக பணியாற்றி வந்தார். பிரவீன் மற்றும் சக வீரர்களும் சேர்ந்து நேற்று தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பிரவீன் அறைக்கு சென்று வருவதாக சக வீரர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும் அவர் திரும்பி வராததால் உடன் இருந்த வீரர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது, அறையில் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு பிரவீன் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தகவலறிந்து வந்த டிஎஸ்பி ஜாபர் சித்திக், அரக்கோணம் டவுன் போலீசார் பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிந்து பிரவீன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post கடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: அரக்கோணம் ராஜாளி விமான தளத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article