கடற்கரை - தாம்பரம் தடத்தில் ஏசி மின்சார ரயில் சோதனை

2 months ago 7

சென்னை: சென்னை ஐ.சி.எப். ஆலையில், தெற்கு ரயில்​வேக்கான முதல் ஏசி மின்சார ரயில் பிப்​ரவரி முதல் வாரத்​தில் தயாரானது. 12 பெட்​டிகள் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில், சென்னை ரயில் கோட்​டத்​தில் அண்மை​யில் ஒப்படைக்​கப்​பட்​டது. இந்த ரயிலில் அமர்ந்​தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடி​யும்.

அதிகபட்​சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்​தில் செல்​லும் திறன் கொண்​டது. தானி​யங்கி கதவு​கள், ஜி.பி.எஸ். அடிப்​படையிலான தகவல் வசதி மற்றும் அறிவிப்பு வசதிகள் உள்ளன. அனைத்து ரயில் பெட்​டிகளி​லும் சிசிடிவி கேமராக்கள் இருக்​கும். இந்த ரயில் தாம்​பரம் யார்​டில் நிறுத்​தப்​பட்டு, சோதனை செய்​யப்​படு​கிறது.

Read Entire Article