சென்னை: தமிழ்நாடு காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025ம் ஆண்டு முதல் காலாண்டில் சாலை விபத்து மரணங்களில் 15 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. 2024ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 4,864 மரணங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் 2025ல் 4,136 மரணங்களே ஏற்பட்டுள்ளன. 2025ம் ஆண்டின் முதல் காலாண்டில் போக்குவரத்து ஓட்டத்தையும் சாலை பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்காக தடுப்பு நடவடிக்கைகள், அவசர சேவைகள் மற்றும் பொதுமுக்கள் விழிப்புணர்வு ஆகிய மாற்றத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இம்முயற்சிகள் 15 சதவீதம் உயிரிழப்புகளையும், மரண விபத்துகளையும் குறைத்துள்ளன.
விரைவான அவசரகால நடவடிக்கைக்காக 24×7 நெடுஞ்சாலை ரோந்து, பாதுகாப்பான ‘யு’ திருப்பங்கள் மற்றும் சாலை பதாகைகள் போன்றவற்றை கவனிக்காமல் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது 38.4 லட்சம் போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2,551 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தக்க நேரத்தில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 9,156 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இதன் மூலம் 5.71 லட்சம் பொதுமக்களிடம் சென்ற அடைந்துள்ளது.
போக்குவரத்து சட்டங்களை கடுமையாக அமல்படுத்தியதன் விளைவாக 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
The post கடந்த 3 மாதங்களில் மாநிலம் முழுவதும் சாலை விபத்து மரணங்கள் 15 சதவீதமாக குறைந்தது: தமிழக காவல்துறை தகவல் appeared first on Dinakaran.