
சுபமுகூர்த்த தினம், பக்ரீத் பண்டிகை, வாரவிடுமுறை ஆகிய காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதன் காரணமாக அரசு, தனியார் பஸ்கள், ரெயில்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு அரசு பஸ்களில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 540 பேர் பயணித்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து 3 ஆயிரத்து 28 அரசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.