ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற அந்த இந்திய வீரர்தான் காரணம் - ஸ்டீவ் சுமித்

3 hours ago 3

சிட்னி,

அண்மையில் முடிவடைந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இதன் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஸ்டீவ் சுமித் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இருப்பினும் முக்கியமான தருணத்தில் முகமது ஷமி வீசிய புல்டாஸ் பந்தில் போல்டானார். இதனால் அதிருப்தியுடன் வெளியேறினார். அத்துடன் இந்த தோல்வியின் எதிரொலியாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது ஓய்வு முடிவு குறித்து சில கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

அதில், "நான் வழக்கமாக வீட்டில் எங்காவது ஒரு கிரிக்கெட் பேட்டை வைத்திருப்பேன். சில சமயங்களில் வீட்டில் இருக்கும்போது சிறிது நேரம் அதை வைத்து நிழல் பயிற்சி செய்வேன். ஆனால் அப்படி எதையும் செய்யக்கூடாது என ஒரு முடிவை நான் எடுத்தேன். அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருந்தது

சாம்பியன்ஸ் டிராபியில் முகமது ஷமியின் புல் டாஸை நான் தவறவிட்டதிலிருந்து நான் ஒரு பந்தை கூட அப்படி அடித்து பயிற்சி செய்யவில்லை. அதனால்தான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை எடுத்தேன். அதிர்ஷ்டவசமாக, எல்லாம் உடனடியாக சரியானது. நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். இப்போது மீண்டும் அதில் ஈடுபடத் தயாராக இருக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு சிறப்பாக தயாராகி வருகிறேன்" என்று கூறினார். 

Read Entire Article